Thursday 14 March 2024

சிதம்பரம் பகுதி 

ஆண்டு மாநாடு 

மற்றும் 

மகளிர் தின விழா 

              12.3.24 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி சார்பாக தெற்கு சன்னதி நாடார் சத்திரத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டமும், மகளிர் தின விழாவும் பகுதி தலைவர் டி.விஸ்வலிங்கம் விஜயலட்சுமி நந்தகுமார் இணைந்த தலைமையில் நடைபெற்றது. பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ்.குமார் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கையினை சமர்பித்தார். 

     மாவட்ட செயலாளர் ஆர்.அசோகன், தலைவர் கே.சந்திரமோகன், எஸ்.சாந்தகுமார், வி.இளங்கோவன், ஏ.ஜெயக்குமார்,எச்.இஸ்மாயில் மரைக்கார், கள்ளக்குறிச்சி தோழர் மணி, மகளிர் சார்பில் என்.விஜயலட்சுமி, டி.ராஜகுமாரி, கடலூர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன், கீதா ஜவகர், ஆர்.கயல்விழி வாழ்த்துரையும் மகளிர் தின சிறப்புகள் பற்றியும் பேசினார்கள். 

தமிழ் மாநில தலைவர் வி.சாமிநாதன், அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் தோழர் P.ஜெயராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மூத்த தோழியர் சரஸ்வதி ராமச்சந்திரன் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார் 

தோழர்கள் ஜி.எஸ்.குமார் தலைவராகவும், டி.விஸ்வலிங்கம் செயலாளாராகவும்,கே.லட்சுமிநாராயணன் பொருளாளராகவும் 2024-2026ம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

விழா ஏற்பாடுகளை கே.லட்சுமி நாராயணன் தலைமையில் தோழர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, வி.கருணாநி தி,என்ராஜேந்திரன்,நாகராஜு, மாதேஸ்வரன், டெல்லி பாபு, சுந்தர் செய்திருந்தனர். 25 மகளிர் உட்பட 100 ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். ‌

புதிய பகுதி செயலாளர் டி.விஸ்வலிங்கம் நன்றி கூறிய பின் விழா நிறைவு பெற்றது.





No comments:

Post a Comment