Monday 11 March 2024

 விருத்தாசலம் பகுதி மாதாந்திர கூட்டம்

விருத்தாச்சலம் பகுதியின் மாதாந்திர கூட்டம் 10.3.2024 மாலை நான்கு மணி அளவில் தலைவர் திரு.ஞானசேகரன் தலைமையில், பகுதி செயலாளர் தோழர்.ரா. ராமலிங்கம் வரவேற்புரை நல்கிட 38 தோழர்கள் முன்னிலையில் துவங்கியது. 

விருத்தாசலம் பகுதி உறுப்பினர் தோழர் K.கனகராஜ் மறைவுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சாந்தகுமார் அவர்கள் தனது கருத்துரையில் CGHS சம்பந்தமான பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார். இடையில் நம் உறுப்பினர்களின் சந்தேக வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். 

அடுத்து நமது விருதை பகுதியின் பொறுப்பாளர் தோழர் K.வெங்கட்ரமணன் அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு நீண்ட தொரு வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். 

நமது மாவட்ட தலைவர் தோழர் சந்திரமோகன் அவர்கள் தனது உரையில் CGHS , LIFE CERTIFICATE, INCOME TAX , PENSION REVISION போன்ற பல்வேறு செய்திகளை மிகவும் அற்புதமாக எடுத்துக் கூறினார். இடை இடையே உறுப்பினர்களின் சந்தேக வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். 

இறுதியாக அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் பா.ஜெயராமன் தனது கருத்துரையில் மகளிர் தின வாழ்த்துக்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு இச்சங்கம் தீர்த்து வைத்த பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிட்டார். 

தோழர்கள் உளுந்தூர்பேட்டை நசீர்பாஷா, ஜகந்நாதன், நல்லதம்பி, சுந்தர்ராஜ், திட்டக்குடி சுப்பிரமணியன்,பெண்ணாடம் கணபதி, விருதை கலைமணி ஆகியோர் தங்கள் கருத்துக்களை வழங்கினர். 

 இறுதியாக தோழர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.




No comments:

Post a Comment