Thursday, 27 February 2025
Friday, 27 December 2024
Sunday, 13 October 2024
விருத்தாசலம் பகுதி மாதாந்திர கூட்டம் 13.10.2024
விருத்தாசலம் பகுதியின் மாதாந்திர கூட்டம் 13.10.2024 மாலை நான்கு மணியளவில் தலைவர். M. ஞானசேகரன் தலைமையில் 30 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள ஒருங்கிணைப்பாளர் வரவேற்றிட கூட்டம் தொடங்கியது. புதியதாக இணைந்த தோழர்கள். சின்னதுரை, முத்துராமன் ஆகியோருக்கு ஒருங்கிணைப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
தோழர்கள் ஜெகந்நாதன், மாவட்ட சிறப்பு அழைப்பாளர் V.நல்ல தம்பி, தோழர். அருள்லாரன்ஸ், மோகன்ராஜ் விருத்தாசலம், விஸ்வலிங்கம் பெண்ணாடம்,
சுப்பிரமணியன் SDE திட்டக்குடி, முறையே மெடிக்கல் அலவன்ஸ், வாழ்நாள் சான்றிதழ்,
சென்னை சொஷைட்டி, 78.2 % போன்ற பிரச்சனைகளை
தீர்வுகண்டிட நினைவுறுத்தினர்.
மாவட்ட அமைப்பு
செயலர் G.அசோகன், மாநில
துணைத்தலைவர் தோழர் திருஞானம் ஆகியொர் சிறப்புரையாற்றினர். தோழர் NT அவர்கள் மாவட்டச் சங்கம், மாநிலசங்கம், அகில இந்திய சங்கம் ஆகியவைகளின் செயல்பாடுகள்,
இன்றைய கேள்விக்குறியாக உள்ள pension revision வழக்குகள், chennai society, 78.2%, மருத்துவ அலவன்ஸ் பணப்பட்டுவாடா, CGHS ல் சேர்வதினால் கிடைக்க கூடிய
நன்மைகள், பாட்டியால செயற்குழு முடிவுகள், தோழர்களின் கேள்விகளுக்கு தேவையான பதிலையும், மாவட்ட
செயலரின் இடைவிடாத பணிகளையும், அண்ணாச்சி அவர்களின்
மற்றதுறைசார்ந்த ஓய்வூதியர்களுக்கும் அளப்பரியபணியையும், குடும்ப
ஓய்தியர்களின் நிலுவைத்தொகையினை பெற்றுத்தருகின்ற பாங்கினையும் மிக அருமையாக
எடுத்துரைத்தார்.
தோழர்கள்.
திண்டிவனம் ஹாரூன்பாட்சா, விநாயகம்
போன்றவர்களின் வியப்பான பணிகளை எடுத்துக் கூறியது மெய்சிலிர்க்கவைக்கின்றது.
இறுதியாக B.கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது
Thursday, 10 October 2024
திண்டிவனம் பகுதி புணரமைப்பு -
மாதாந்திர கூட்டம் 10-10-2024
தலைவர் தோழர் R.ராஜேந்திரன் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது. நமது பகுதியின்
ஒருங்கிணைப்பாளர் தோழர் D. திருவிக்கிரமன் வரவேற்புரையாற்றினார் மூத்த தோழர் மாவட்ட
செயற்குழு உறுப்பினர் தோழர் S. நாராயணசாமி அவர்கள் எதிர்கால பிரச்சனைகள் பற்றியும்
புனரமைப்பு கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து ஒரு கணிசமான தொகையை
இருப்பு வைத்து செலவினங்களை செய்து கொள்வது பற்றியும் நமது சங்கத்தில் அனைத்து
சங்கத்தை சார்ந்த பல முன்னணி தோழர்கள் நமது சங்கத்தில் சேர்ந்துள்ளார்கள் என்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். நமது
பகுதியின் முன்னணி தோழர் S.நடராஜன் )அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகளையும் சொசைடியின்
நம்பிக்கை இல்லா பாங்கினையும் எடுத்துரைத்தார்.
தோழர்
J தர்மலிங்கம் SDE அவர்கள் சங்கத்தின் தோழர்களின் மனித நேயமிக்க பணியினை
பாராட்டி புகழ்ந்து பேசினார்.
மாவட்ட
உதவி செயலாளர் Y.ஹாரூன்பாஷா அவர்கள்
சாம்பனின் செயல்பாடுகளை யும் profie Data வின்
அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.
தோழர்
A முனுசாமி அவர்கள் நமது பகுதி வளர்ச்சியையும்
எந்தவித சந்தேகங்களை தயங்காமல் கேட்கலாம் என்று கூறினார்.
மாநில
சங்க நிர்வாகி தோழர் N.திருஞானம்
அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் நீதிமன்ற பிரச்சனை, PENSION ரிவிசன்
ஆகியவற்றை தெளிவாக எடுத்துரைத்து P.வினாயகம் SDE .Y ஹாருன் பாஷா JE ஆகியயோரின்
சேவைகளை பாராட்டினார்.
மாவட்ட
செயலாளர் தோழர் அசோகன் அவர்கள் KYP பற்றியும்
பிறந்த தேதி ஆதார் பான் இணைப்பு பற்றியும் தெளிவாக கூறினார்.
அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தோழர் அண்ணாச்சி அவர்கள் ஏழாவது ஊதிய குழுவின் நீதிமன்ற செயல்பாடுகளையும் நமது சங்கம் கையாண்ட அணுகுமுறையும் விதவைகளுக்கு தேடி சென்று பென்சன் வாங்கி தந்ததையும் அரியர்ஸ் 10 லட்சத்திற்கு மேல் வாங்கி கொடுத்தது இந்த சங்கம் என்பதையும் பாட்டியாலா செயற்குழுவின் தீர்மானங்களை பற்றி மிக தெளிவாக எடுத்துரைத்தார்.
Sunday, 6 October 2024
விழுப்புரம்
பகுதி மாதாந்திர கூட்டம் 6.10.2024
விழுப்புரம் பகுதி துணை தலைவர் தோழர் V.பெருமாள் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர்
G. கணேசன் வரவேற்புரை ஆற்ற 8 தோழியர்கள் உட்பட
60 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில்
தோழர்கள் பல்வேறு செய்திகளையும் பகிர்ந்து வாழ்த்துரை வழங்கினர். புதிதாக இணைந்த தோழர் C. சுந்தரம் Rtd JE அவர்களுக்கு
அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் P. ஜெயராமன் பொன்னாடை
போர்த்தி கௌரவித்து சிறப்புரையாற்றினார்.
ஆண்டர்சன் இரத்த பரிசோதனை மையம் சார்பாக இரத்த பரிசோதனை இலவசமாக நடைபெற்றது. நடைபெற்ற பரிசோதனை முகாமில் 44 தோழர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
பண்ருட்டி
பகுதி ஓய்வூதிய சங்கத்தின் மாதாந்திரக்கூட்டம்
6-10-2024
தோழர் K.பழனிமுத்து அவர்கள் தலைமையில் சிறப்புடன்
நடைபெற்றது. தோழர் S.பாஸ்கரன் அனைவரையும் வரேவேற்று
பண்ருட்டி பகுதியில் உறுப்பினர்களின் பிரச்சனைகளை மாவட்டச்சங்கத்தின் கவனத்திற்கு
உடனடியாக தெரிவித்து சரி செய்துவருகிறோம் என தெரிவித்தார்.
தோழர்
சுந்தரமூர்த்தி தீர்க்கப்பட்ட உறுப்பினர்களின் அன்றாட பிரச்சனைகள்,தீர்க்கப்பட வேண்டி நிலுவையிலுள்ள பிரச்சனைகள் பற்றிய விவரங்களை
எடுத்துரைத்து பிரச்சனைகள் தீர்வில் மாவட்டச் சங்கம் கூடுதல் கவனம் செலுத்தி
வருவதை பாராட்டினார்.
பிரச்சனைகள்
பற்றிய விவாதங்களில் தோழர்கள் மாரிமுத்து, நடராஜன்,
தியாகராஜன், மாயகிருஷ்ணன் ஆகியோர்
கருத்துக்களை தெரிவித்தனர்.
மாவட்டச்சங்க
சிறப்பு அழைப்பாளர் தோழர் லோகநாதன் பிரச்சனைகள் தீர்வில் மத்திய,
மாநில, மாவட்டச்சங்கங்களின் சிறப்பான
செயல்பாட்டினையும், பென்ஷன் ரிவிஷன் இன்றய நிலை ,தற்கால அரசியல் சூழல் ஆகியவற்றைப்பற்றி கருத்துரை வழங்கினார்.
தோழர் ரங்கராஜ் பண்ருட்டி பகுதியில் கிளையை உருவாக்கி மாதாந்திரக்கூட்டங்களில் இப்பகுதி உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்பது,மத்திய ,மாநில,மாவட்டச்சங்க செய்திகளை அனைவரும் தெரிந்துகொள்வதற்கு நல்லவாய்ப்பாகவுள்ளது,மேலும் LIFE CERTIFICATE உறுப்பினர்கள் பண்ருட்டியிலே எடுத்துக்கொள்ளலாம் என்ற விவரங்களை தெரிவித்தார்.
மாவட்டச்செயலர்
தோழர் அசோகன் பண்ருட்டி பகுதியில் 78.2 உறுப்பினர்களுக்கு கிடைத்திட
உரிய நடவடிக்கை எடுத்துவருகிறோம். தோழர்கள் துரைராஜ், மாரிமுத்து
உத்தரவு பெற்றுள்ளோம். தோழர் சாம்பசிவம் அவர்களுக்கும் விரைவில் கிடைத்திட
நடவடிக்கை எடுத்துள்ளோம். அக்டோபர் மாத ஊதியத்துடன் அனைவருக்கும் நிலுவைத்தொகையும்
கிடைக்கும் எனவும், மாவட்டசங்கம் பிரச்சனைகள் தீர்வில்
கூடுதல் கவனம் செலுத்திவருகிறது என விவரங்களை தந்திட்டார்.
அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் ஜெயராமன், அவர்கள், மத்திய செயற்குழு முடிவுகள், பென்ஷன் ரிவிஷன் அடுத்தக்கட்ட நகர்வு, CGHS, சென்னை கூட்டுறவு சொசைட்டி பிரச்சனைகள் தீர்விற்காக மத்திய சங்கம் டெல்லியில் Central Register யை சந்தித்து விவாதிப்பதற்கான நடவடிக்கை எடுத்துவருவது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பல்வேறு செய்திகளை சிறப்புரையாக தந்திட்டார்.